என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா
நீங்கள் தேடியது "பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா"
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் இதற்காக காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றும் ராகுல் கூறியுள்ளார். #WomensReservationBill #RahulSupport
புதுடெல்லி:
பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, 2010-ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றபடவில்லை.
முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மசோதா நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை இணைத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. #WomensReservationBill #RahulSupport
பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, 2010-ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றபடவில்லை.
முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மசோதா நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விரைவில் கூட உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை இணைத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. #WomensReservationBill #RahulSupport
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X